இந்தியா

வாக்காளர்களை மிரட்டிய பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

DIN

உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மிரட்டிய தெலங்கானா எம்எல்ஏ டி.ராஜா சிங்குக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டமாக நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலின் 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் ‘உத்தரப் பிரதேசத்தில் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையென்றால் அனைவரது வீடுகளையும் ஜேசிபி வாகனத்தைவிட்டு இடிப்பேன்’ எனப் பேசிய விடியோ  இணையத்தில் வைரலானது. 

பலரும் இதனைக் கண்டித்து வரும் வேளையில் இந்தியத் தேர்தல் ஆணையம் எம்எல்ஏ டி.ராஜா சிங்குக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT