12 - 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி: மத்திய அரசு
நாட்டில் 12 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
புது தில்லி: நாட்டில் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு தயாரிப்பான கோர்பெவேக்ஸ் தடுப்பூசிக்கு, அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியிருப்பதாக பயாலஜிகல் இ லிமிடட் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, 16 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு கோவேக்ஸின் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு, அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.