நாட்டில் புதிதாக 11,499 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,499 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,499 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,598 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 255 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | ருமேனியா புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்
இதுவரை மொத்தம் 4,22,70,482 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,13,481 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 1,21,881 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
நாட்டில் இதுவரை மொத்தம் 1,77,17,68,379 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.