தெலங்கானாவில் விமான விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி பலி
தெலங்கானாவில், தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி பலியானார்.
ஹைதராபாத்: தெலங்கானாவில், தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி பலியானார்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், விவசாய நிலத்தில் சனிக்கிழமை காலை விழுந்து விபத்துக்குள்ளானது.
விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த பயிற்சி விமானி தமிழகத்தைச் சேர்ந்த பெண் என்பது தெரிய வந்துள்ளது.
நாகார்ஜுனா சாகர் பகுதியிலிருந்து பறந்து வந்த விமானம், முற்பகல் 11.30 மணியளவில், திடீரென நிலப்பரப்பில் விழுந்து, தீப்பற்றி எரிந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.