15-18 வயதுடைய 1 கோடி சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன- மன்சுக் மாண்டவியா
இந்தியாவில் 1 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 1 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 15-18 வயதுடைய சிறார்களுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்றும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 3 நாட்களில் 1 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.