இந்தியா

பிகாரில் மேலும் இரண்டு அமைச்சர்களுக்கு கரோனா

பிகாரில் மேலும் இரண்டு மாநில அமைச்சரவை அமைச்சர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

IANS

பிகாரில் மேலும் இரண்டு மாநில அமைச்சரவை அமைச்சர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

விவசாய அமைச்சர் அம்ரேந்திர பிரதாப் சிங் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜனக் ராம் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த ஜனவரி 4-ஆம் தேதி அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் சமாஜ் சுதர் அபியான் (சமூக சீர்திருத்த பிரசாரம்) நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர். 

மேலும், எஸ்.சி மற்றும் எஸ்.டி அமைச்சர் சந்தோஷ் குமார் சுமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 

ஆனால், தற்போது முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தொழில்துறை அமைச்சர் சையத் ஷாநவாஸ் உசேன் ஆகியோரின் அறிக்கைகள் எதிர்மறையாக வந்துள்ளன. 

முன்னதாக, இரண்டு துணை முதல்வர்கள் தார் கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். 

இதற்கிடையில், பிகாரில் ஜனவரி 6 முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT