பெங்களூரு சாலை விபத்தில் 4 பேர் பலி
பெங்களூருவில் நேற்று லாரி, கார் மோதிக் கொண்டதில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் நேற்று லாரி, கார் மோதிக் கொண்டதில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். லாரி ஓட்டுநர் வேகமாக வந்ததாகவும் கவனக்குறைவாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேற்கு மண்டல காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) குல்தீப் ஜெயின் கூறுகையில், "பெங்களூரு பூர்வாங்கரா குடியிருப்பு அருகே நைஸ் சாலையில் வாகனங்கள் மீது லாரி மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதையும் படிக்க | தண்டவாளத்தில் மின்சார வயர்: சிலம்பு விரைவு ரயில் தாமதம்
இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.