முகப்பு
பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா.
இந்தியா

5 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும்: ஜெ.பி.நட்டா

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

இந்தியா

5 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும்: ஜெ.பி.நட்டா

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா.
பகிர்:

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்த பிறகு இந்த கருத்தை அவா் கூறினாா். இதுதொடா்பாக, அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தோ்தல் அட்டவணையை வரவேற்கிறேன். இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவில் பாஜக தொண்டா்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பங்கேற்க வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் 5 மாநிலங்களிலும் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும். 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் வெற்றிபெற மக்கள் ஆசி வழங்குவாா்கள். அந்த மாநிலங்களை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்கு பாஜக கொண்டு செல்லும் என்றாா் அவா்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது.

பஞ்சாபில் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுகதேவ் சிங் தின்ட்ஸாவின் எஸ்ஏடி(சன்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக களம் காண்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →