உத்தரகண்ட்: ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் மீண்டும் இணைந்தாா் ரவீந்திர ஜுக்ரான்
உத்தரகண்டில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ரவீந்திர ஜுக்ரான் மீண்டும் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா்.
இந்தியாஉத்தரகண்ட்: ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் மீண்டும் இணைந்தாா் ரவீந்திர ஜுக்ரான்
உத்தரகண்டில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ரவீந்திர ஜுக்ரான் மீண்டும் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா்.
உத்தரகண்டில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ரவீந்திர ஜுக்ரான் மீண்டும் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘‘நான் பாஜகவில் 25 ஆண்டுகள் இருந்தேன். தற்போது அக்கட்சிக்கு திரும்பியிருப்பது சொந்த இல்லத்துக்கு வந்தது போல் மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று தெரிவித்தாா்.
‘‘ரவீந்திர ஜுக்ரானின் அனுபவம், திறன் மூலம் விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பயனடையும்’’ என்று அக்கட்சியின் உத்தரகண்ட் தலைவா் மதன் கெளசிக் தெரிவித்தாா்.
உத்தரகண்ட் முன்னாள் முதல்வா் புவன்சந்திர கந்தூரிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ரவீந்திர ஜுக்ரான், மாநில அமைச்சராக பதவி வகித்துள்ளாா்.
உத்தரகண்டில் பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.