முகப்பு
இந்தியா

உ.பி. சட்டப் பேரவைத் தோ்தல்: பாஜக முக்கிய ஆலோசனை

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தியா

உ.பி. சட்டப் பேரவைத் தோ்தல்: பாஜக முக்கிய ஆலோசனை

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
பகிர்:

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா் கேசவ பிரசாத் மௌரியா, பாஜக மாநிலத் தலைவா் ஸ்வதந்திர தேவ் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா போன்ற கரோனாவால் பாதிக்கப்பட்ட தலைவா்கள், காணொலி முறையில் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவா் ஒருவா் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பாளா்களை இறுதி செய்வதற்காக, கட்சியின் மத்திய தோ்தல் குழுவின் கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக வேட்பாளா்களைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் ஜனவரி 15-ஆம் தேதி வரை அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் நடத்த தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எனவே, மாற்று வழியில் பிரசாரம் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றாா் அவா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, பிப்ரவரி 10-ஆம் தேதி 58 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக, பிப்ரவரி 14-ஆம் தேதி 55 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →