மருத்துவமனைகளில் போதிய அளவு ஆக்சிஜனை இருப்பு வைத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ ஆக்சிஜனை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் கருவிகள் செயல்படும் நிலையில் உள்ளதை மாநில சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.