முகப்பு
இந்தியா

பஞ்சாப் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பாஜக கடிதம்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி பாஜக மாநில பொதுச்செயலாளர் சுபாஷ் சர்மா தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:


பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி பாஜக மாநில பொதுச்செயலாளர் சுபாஷ் சர்மா தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறுகிறது. குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைக்கக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பஞ்சாப் பாஜக கடிதம் எழுதியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் சுபாஷ் சர்மா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குரு ரவிதாஸ் ஜெயந்தி பிப்ரவரி 16-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

பஞ்சாப் மக்கள்தொகையில் 32 சதவிகிதம் இருக்கும் பட்டியலினத்தவர்கள் உள்பட குரு ரவிதாஸைப் பின்பற்றுபவர்கள் மாநிலத்தில் கணிசமாக உள்ளனர். குரு ரவிதாஸ் ஜெயந்தியைக் கொண்டாடும் விதமாக லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள பனாரஸ் செல்வார்கள்.

இந்த வாக்காளர்களும் தேர்தல் நடைமுறையில் கலந்துகொள்ளும் வகையில், வாக்குப் பதிவு தேதியை ஒத்திவைக்கக்கோரி கேட்டுக்கொள்கிறோம்."

முழு கட்டுரையைப் படிக்க →