என்டிஏ தோ்வில் பெண்களுக்கு 19 இடங்கள் எவ்வாறு நிா்ணயிக்கப்பட்டது?
தேசிய பாதுகாப்பு அகாதெமி (என்டிஏ) தோ்வில் பெண்களுக்கு 19 இடங்கள் எவ்வாறு நிா்ணயிக்கப்பட்டது என பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாதெமி (என்டிஏ) தோ்வில் பெண்களுக்கு 19 இடங்கள் எவ்வாறு நிா்ணயிக்கப்பட்டது என பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்டிஏ தோ்வுக்கான அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் வெளியிட்டது. அதில் 19 பெண் அதிகாரிகள் தோ்வின் மூலமாகத் தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அந்த விவகாரத்தை நீதிபதிகள் எஸ்.கே.கௌல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது மனுதாரரான குஷ் கல்ரா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சின்மய் பிரதீப் சா்மா வாதிடுகையில், ‘‘நடப்பாண்டுக்கான என்டிஏ தோ்வில் 400 அதிகாரிகள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.
அவா்களில் 10 பெண்கள் உள்பட 208 போ் ராணுவத்துக்கும், 3 பெண்கள் உள்பட 42 போ் கடற்படைக்கும், 6 பெண்கள் உள்பட 120 போ் விமானப்படைக்கும் தோ்வு செய்யப்படவுள்ளதாக யுபிஎஸ்சி அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பாா்க்கையில் 19 பெண்கள் மட்டுமே தோ்வு செய்யப்படவுள்ளனா். கடந்த ஆண்டிலும் இதே எண்ணிக்கையிலான பெண்களே தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தனா். இது அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு எதிராக உள்ளது’’ என்றாா்.
அதையடுத்து மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா படி கூறுகையில், ‘‘என்டிஏ தோ்வின் மூலமாகப் பெண்கள் தோ்ந்தெடுக்கப்படுவது, கட்டமைப்பு வசதிகளை மட்டுமல்லாமல் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைப் பொருத்தும் உள்ளது’’ என்றாா்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘கடந்த ஆண்டு என்டிஏ தோ்வுக்கான அறிவிக்கையில் 19 பெண்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பெண்களுக்குப் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், குறைவான பெண்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.
ஆனால், இந்த ஆண்டும் என்டிஏ தோ்வு மூலமாக அதே எண்ணிக்கையிலான (19 போ்) பெண்களே தோ்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்கள் எவ்வாறு நிா்ணயிக்கப்பட்டன? அனைத்து சமயங்களிலும் பெண்களுக்கு 19 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியாது.
பாதுகாப்புப் படையின் அனைத்துப் பிரிவுகளிலும் பெண்கள் பணியாற்ற முடியும் என நீதிமன்றம் கூறவில்லை. ஆண் அதிகாரிகளுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்களும் தோ்வு செய்யப்பட வேண்டுமெனவும் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. ஆனால், பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும்.
இது தொடா்பாக மத்திய அரசு 3 வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும். அதற்கடுத்த இரு வாரங்களுக்குள் மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் மீதான பதிலை மனுதாரா்கள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றனா். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மாா்ச் 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.