முகப்பு
இந்தியா

தில்லியில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

மேற்கு தில்லியின் ஹரி நகரில் உள்ள 4 மாடிக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் மீட்கப்பட்டதாகத் தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
கோப்புப்படம்
பகிர்:

மேற்கு தில்லியின் ஹரி நகரில் உள்ள 4 மாடிக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் மீட்கப்பட்டதாகத் தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்புக்கு வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு சேவையின் இயக்குனர் அதுல் கார்க் கூறுகையில், 

நான்கு மாடிக் கட்டடத்தில் உள்ள மின் பலகைகள் தீ பிடித்து எரிந்ததால்,  அங்குள்ள அனைத்து தளங்களிலும் புகை பரவியது. 4 மாடிக் கட்டடத்திலிருந்த 22 பணியாளர்களை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர் என்று அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →