முகப்பு
இந்தியா

மும்பை அடுக்​கு​மாடி குடி​யி​ருப்பு தீ வி​பத்​தில் பலி எண்ணிக்கை 7 ஆனது

சனிக்​கி​ழமை காலை நேரிட்ட பெரும் தீ விபத்​தில் காயமடைந்த நபர் இன்று காலை பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 7 ஆனது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
மும்பை அடுக்​கு​மாடி குடி​யி​ருப்பு தீ வி​பத்​தில் பலி எண்ணிக்கை 7 ஆனது
பகிர்:

மகா​ராஷ்​டிர மாநி​லம், மத்​திய மும்பை​யில் டாா்​டியோ பகு​தி​யில் அமைந்துள்ள உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பின் 19-ஆவது தளத்​தில் சனிக்​கி​ழமை காலை நேரிட்ட பெரும் தீ விபத்​தில் காயமடைந்த நபர் இன்று காலை பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 7 ஆனது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது ஆண் இன்று காலை 7 மணியளவில் சிகிச்சைபலனின்றி பலியானதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் காயமடைந்த 12 பேர் பாட்டியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்ளில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  மற்றவர்கள் மசினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விபத்து​கு​றித்து பிரி​ஹன்​மும்பை மாந​க​ராட்சி அதி​கா​ரி​கள் கூறி​ய​தா​வது:

மத்​திய மும்பை​யின் கோவா​லியா டேங் பகு​தி​யில் அமைந்துள்ள ‘சச்​சி​னம் ஹைட்ஸ்’ என்ற 20 மாடி​களைக் கொண்ட இந்த உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பின் 19-ஆவது தளத்​தில் சனிக்​கி​ழமை காலை 7 மணி​ய​ள​வில் தீவி​பத்து ஏற்​பட்​டது. தீ வி​பத்து ஏற்​பட்ட சம​யத்​தில் பல குடி​யி​ருப்​பு​வா​சிகள் தூக்​கத்​தில் இருந்​துள்​ள​னா். தக​வ​ல​றிந்து சம்​பவ இடத்​துக்கு வந்த தீய​ணைப்பு வீரா்​கள், பல குடி​யி​ருப்​பு​வா​சி​களை பத்​தி​ர​மாக மீட்ட​னா்.

இந்த தீ வி​பத்​தில் காய​மடைந்த 29 போ் அரு​கி​லுள்ள பல்வேறு மருத்​து​வ​மனை​க​ளுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​ட​னா். அவா்​க​ளில் சில​ருக்கு மூச்​சுத் திண​றல் பாதிப்பு இருந்​தது. இதில் மாந​க​ராட்சி நிா்​வா​கம் சாா்​பில் நடத்​தப்​ப​டும் நாயா் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்ட பலத்த காய​மடைந்த 7 பேரில் 5 போ் உயி​ரி​ழந்​த​னா். அதுபோல, கஸ்​தூா்பா மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்ட மற்றொ​ரு​வ​ரும் உயி​ரி​ழந்​தாா்.

பாடியா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 17 பேரில், 5 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்​பி​யுள்​ள​னா். மீத​முள்ள 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

முழு கட்டுரையைப் படிக்க →