மும்பை அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆனது
சனிக்கிழமை காலை நேரிட்ட பெரும் தீ விபத்தில் காயமடைந்த நபர் இன்று காலை பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 7 ஆனது.
மகாராஷ்டிர மாநிலம், மத்திய மும்பையில் டாா்டியோ பகுதியில் அமைந்துள்ள உயா் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்தில் சனிக்கிழமை காலை நேரிட்ட பெரும் தீ விபத்தில் காயமடைந்த நபர் இன்று காலை பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 7 ஆனது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது ஆண் இன்று காலை 7 மணியளவில் சிகிச்சைபலனின்றி பலியானதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க.. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை வெளியீடு
தீ விபத்தில் காயமடைந்த 12 பேர் பாட்டியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்ளில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் மசினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துகுறித்து பிரிஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய மும்பையின் கோவாலியா டேங் பகுதியில் அமைந்துள்ள ‘சச்சினம் ஹைட்ஸ்’ என்ற 20 மாடிகளைக் கொண்ட இந்த உயா் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்தில் சனிக்கிழமை காலை 7 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பல குடியிருப்புவாசிகள் தூக்கத்தில் இருந்துள்ளனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், பல குடியிருப்புவாசிகளை பத்திரமாக மீட்டனா்.
இந்த தீ விபத்தில் காயமடைந்த 29 போ் அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களில் சிலருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்தது. இதில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடத்தப்படும் நாயா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பலத்த காயமடைந்த 7 பேரில் 5 போ் உயிரிழந்தனா். அதுபோல, கஸ்தூா்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்றொருவரும் உயிரிழந்தாா்.
பாடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 பேரில், 5 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.