இந்தியா

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது

DIN

ஜெய்ப்பூர்:  ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில், துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வந்த ஒரு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டபோது பாலிதீன் மாத்திரைகளில் மறைத்து உடலில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

ரூ.25,37,865 மதிப்புள்ள 99.50 சதவீதம் தூய்மையான 512.700 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறைச் சட்டம் 1962 இன் விதிகளின் கீழ் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியையும் கைது செய்தனா். 

கைது செய்யப்பட்ட பயணியிடம் மேலதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT