இந்தியா

உதய்பூர் படுகொலை: மேலும் இருவர் கைது

ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

IANS

ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். 

முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காக தையல்காரர் கன்னையா லால் ஜூன் 28 அன்று அவரது கடையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். கொலையாளிகளான கௌஸ் முகமது மற்றும் ரியாஸ் ஆகியோர் கொலையின் விடியோவை பதிவேற்றியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) பயங்கரவாத எதிர்ப்புப் படை(ஏடிஎஸ்) மற்றும் ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் ஆதரவுடன் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொடர்புடைய கூட்டாளியான மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார். 

இந்த வழக்கை என்ஐஏ மேலும் விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானாவில் அரசுப்பேருந்து - லாரி மோதல்: 19 பேர் பலி

தில்லியில் பத்தாண்டுகளில் காணாமல் போன 1.8 லட்சம் குழந்தைகள்! 50 ஆயிரம் பேரின் நிலை?

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

DIGITAL ARREST மோசடியில் புதிய உச்சம்! 58 கோடியை இழந்த தம்பதி! | Digital Arrest

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

SCROLL FOR NEXT