இந்தியா

மத்திய உருக்குத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூடுதலாக உருக்குத்துறை அமைச்சராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

DIN

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூடுதலாக உருக்குத்துறை அமைச்சராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்த முக்தார் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவர் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.சி.பி. சிங்கும் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

இந்நிலையில் ஆர்.பி. சிங் பொறுப்பு வகித்த உருக்குத்துறை அமைச்சர் பொறுப்பு ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு சிறுபான்மையினா் நலத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி விலகியதையடுத்து, இஸ்லாமியர்களே இல்லாத அமைச்சரவையாக மாறியுள்ளது. மேலும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக சார்பில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT