இந்தியா

ஆப்கனில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

ANI

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

கிழக்கு நங்கர்ஹார், நூரிஸ்தான் மற்றும் கானி மாகாணங்கள் மற்றும் நாட்டின் வடக்கே பர்வானில் அதிக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் பதிவாகியுள்ளன என்று ஜநா மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

ஜூலை 5, 6 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் 280-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அத்துடன் 4 பாலங்கள் மற்றும் 8 சாலை உள்பட 9 மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

ஜூன் மாதத்தில் 2 நாள்கள் பெய்த கனமழையில் 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 131 பேர் காயமடைந்தனர். ஒரே மாதத்திற்குள் கிழக்கு பிராந்தியத்தில் திடீர் வெள்ளம் ஏற்படுவது இது 2-வது முறையாகும். 

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, நூரிஸ்தான் மாகாணத்தில், குனார் முதல் நூரிஸ்தானின் மையப்பகுதி வரையிலான சாலை போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படகுப் பயணம்... அப்சரா ராணி!

தில்லி காற்று மாசுக்கு யார்க் காரணம்? வெறும் வேளாண் தீ மட்டுமல்ல..

ரொம்ப அழகா தெரிய முயற்சி செய்வதில்லை... ரகுல் பிரீத் சிங்!

கௌதம் கம்பீர் என்னுடைய உறவினர் கிடையாது; ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

இம்ரான் கானுக்கு என்ன ஆனது? சிறை அதிகாரிகள் விளக்கம்!

SCROLL FOR NEXT