முகப்பு
இந்தியா

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் தீ விபத்து

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க் கப்பலில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க் கப்பலில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
 இதுதொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், "கர்நாடக மாநிலம் கார்வார் கடற்பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
 கப்பலில் இருந்த தீயணைப்பு சாதனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து கடற்படை தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →