முகப்பு
இந்தியா

திரிபுரா முதல்வருக்கு கரோனா பாதிப்பு

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா

திரிபுரா முதல்வருக்கு கரோனா பாதிப்பு

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில், முக்கிய பிரமுகர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். 

அந்த வகையில், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் திடமுடன் நலமாக இருக்கிறேன். அறிகுறிகள் எதுவுமில்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து விலகிய மாணிக் சாஹா, மாநில முதல்வராக பதவியேற்றுக்கொண்டதையடுத்து, இடைதேர்தலில் வெற்றிபெற்று கடந்த ஜூலை 8 ஆம் தேதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார், முன்னதாக, திரிபுரா முதல்வராக இருந்த பிப்லவ் தேவ் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →