இந்தியா

ரஷியாவில் மருத்துவம் பயின்றதாக போலிச் சான்றிதழுடன் போலி மருத்துவர் கைது

DIN

ஹைதராபாத்: ரஷியாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றதாக போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரஷ்யா சென்று வந்தது போன்று தனது கடவுச்சீட்டில் போலி முத்திரை பெற முயற்சித்து வந்த நிலையில் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்மான்கட் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த 36 வயதாகும் விஜயகுமார் என்பவரை மீரட் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை செய்து, போலி சான்றிதழ் பெற உதவிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கமாக இவர் இரவு நேரப் பணிக்கு மட்டுமே வருவார் என்பதால், மற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நோயாளிகளுக்கு இரவு நேரத்தில் வெறும் பார்வையாளராக பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6.5 லட்சம்  கொடுத்து போலி மருத்துவச் சான்றிதழ் வாங்கியதாகவு, இதற்கு முன்பு ஒரு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT