முகப்பு
இந்தியா

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்: நாட்டிலேயே முதல் மாவட்டமான பர்கான்பூர் மக்களுக்கு மோடி வாழ்த்து

நாட்டிலேயே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழ் பெற்ற முதல் மாவட்டமான மத்தியப் பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

நாட்டிலேயே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழ் பெற்ற முதல் மாவட்டமான மத்தியப் பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு  பதிலளித்து பிரதமர் கூறியதாவது:

“இத்தகைய குறிப்பிடத்தக்க, போற்றத்தக்க சாதனையை நிகழ்த்தியதற்காக பர்கான்பூர் மாவட்டத்தின் எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். 

மக்களின் கூட்டுமுயற்சியும், ஜல் ஜீவன் இயக்கம், சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசின் துரிதமான நடவடிக்கைகள் மற்றும் ஒரு கூட்டு மனப்பான்மை இல்லாமல் இது நிகழ்ந்திருக்காது” என்று மோடி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →