இந்தியா

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்: நாட்டிலேயே முதல் மாவட்டமான பர்கான்பூர் மக்களுக்கு மோடி வாழ்த்து

நாட்டிலேயே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழ் பெற்ற முதல் மாவட்டமான மத்தியப் பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

நாட்டிலேயே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழ் பெற்ற முதல் மாவட்டமான மத்தியப் பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு  பதிலளித்து பிரதமர் கூறியதாவது:

“இத்தகைய குறிப்பிடத்தக்க, போற்றத்தக்க சாதனையை நிகழ்த்தியதற்காக பர்கான்பூர் மாவட்டத்தின் எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். 

மக்களின் கூட்டுமுயற்சியும், ஜல் ஜீவன் இயக்கம், சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசின் துரிதமான நடவடிக்கைகள் மற்றும் ஒரு கூட்டு மனப்பான்மை இல்லாமல் இது நிகழ்ந்திருக்காது” என்று மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT