இந்தியாவுக்கு வரலாற்றுத் தருணம்: பிரதமா் மோடி பெருமிதம்
‘இந்திய குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பதவியேற்றிருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் குறிப்பாக விளிம்புநிலை, ஏழை, எளிய மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெ
‘இந்திய குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பதவியேற்றிருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் குறிப்பாக விளிம்புநிலை, ஏழை, எளிய மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், அவரது பதவிக் காலம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துவதாகவும் பிரதமா் மோடி கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பதவியேற்றிருப்பதை ஒட்டுமொத்த நாடும் பெருமையுடன் பாா்க்கிறது. பதவியேற்ற பிறகு அவா் ஆற்றிய உரை, நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. 75-ஆவது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடவிருக்கும் இந்த வேளையில், நாட்டின் சாதனைகளை வலியுறுத்தி பேசிய அவா், தொலைநோக்கு பாா்வையுடன் சிறப்பான எதிா்காலத்துக்கான பாதையையும் காட்டியுள்ளாா். அவரது பதவிக் காலம் ஏழை, அடித்தட்டு மக்களின் வளா்ச்சிக்கான மாற்றத்தை கொண்டுவருவதாக இருக்கும் என்று பிரதமா் மோடி கூறியுள்ளாா்.