முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த நக்சல் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் கிரிமினல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த நக்சலைட் ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
பகிர்:

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் கிரிமினல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த நக்சலைட் ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கடேகல்யாண் கவால் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாப்ரமெட்டாவைச் சுற்றியுள்ள வனத்தில் நக்சல்களுக்கும், மாவட்ட ரிசர்வ் காவலர்களுக்கு ம் இடையே மோதல் ஏற்பட்டது. 

தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் பணியாளர்களை நக்சல்கள் குறிவைத்துத் தாக்கியனர். 

அப்பகுதியில் ​​பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல் ஒருவரின் உடலை மீட்டனர். இது சட்டவிரோத இயக்கத்தின் கடேகல்யான் பகுதிக் குழு உறுப்பினர் புத்ரம் மார்க்கம் என அடையாளம் காணப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மார்கம் மீது 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவரைப்  பற்றி அடையாளம் தருவோருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்திருந்தனர். 

பாதுகாப்புப் படையினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →