இந்தியா

முதல்நாள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவு

இன்று காலை தொடங்கிய அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தது.

DIN

இன்று காலை தொடங்கிய அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தது.

4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு அதிகத் திறன் கொண்ட 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

ஏலத்தில் பங்கேற்க ஜியோ நிறுவனம் ரூ.14 ஆயிரம் கோடியை முன்வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. இதில், ஜியோ அதிக அளவிலும், அதானி நிறுவனம் குறைந்த அளவிலும் அலைக்கற்றையை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

‘முதல் நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறும். அதன் பிறகு, ரேடியோ அலைவரிசைகளுக்கான தேவையைப் பொருத்து எத்தனை நாள்கள் ஏலம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்’ என்று தொலைத்தொடா்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இன்று மாலை 6 மணி வரை 4 சுற்றுகள் நடைபெற்றதாகவும் நாளை புதன்கிழமை மீண்டும் ஏலம் நடைபெற்று 5-வது சுற்று நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT