இந்தியா

மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி எம்.பி. இடைநீக்கம்

DIN

மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மாநிலங்களவையின் நேற்றைய கூட்டத்தின் போது காகிதங்களை கிழித்து அவைத் தலைவரின் இருக்கை முன்பு எறிந்த காரணத்திற்காக இந்த வாரம் முழுவதும் கூட்டத்தில் பங்கேற்க சஞ்சய் சிங்கிற்கு தடை விதித்து அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, அமளியில் ஈடுபட்டதற்காக மாநிலங்களவையில் இருந்து 6 திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT