முகப்பு
இந்தியா

ஆகஸ்ட் 1-ல் மீண்டும் குஜராத் செல்கிறார் அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மீண்டும் குஜராத் பயணம் மேற்கொள்கின்றார்.

Updated On : 28 ஜூலை, 2022 at 2:49 PM
பகிர்:

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மீண்டும் குஜராத் பயணம் மேற்கொள்வார் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார். 

வரவிருக்கும் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக கேஜரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார், 

சோம்நாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கேஜரிவால் உரையாற்றுறுகிறார். மேலும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். 

Advertisement

கடந்த வியாழனன்று சூரத்துக்குச் சென்ற கேஜரிவால், தேர்தலில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் குஜராத் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். 

முன்னதாக ஜூலை 26 ஆம் தேதி, குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில், போலி மது அருந்தி நோய்வாய்ப்பட்ட மக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தில்லி முதல்வர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.