இந்தியா

நாடாளுமன்றத்தில் பாஜக - காங்கிரஸ் அமளி: பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

DIN

நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை இன்று காலை கூடியவுடன், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மக்களவை பகல் 12 வரை ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

அதேபோல், மாநிலங்களவையிலும் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மாறிமாறி முழக்கம் எழுப்பியதால் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காளமாடனும் சாதிக் கலவரங்களும்... பைசன் - திரை விமர்சனம்

உ.பி.யில் கொல்லப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

வடசென்னையின் உலகம்... அரசன் புரோமோ!

தே.ஜ. கூட்டணி வென்றால் பிகாருக்கு புதிய முதல்வர்? அமித் ஷா சூசகம்!

அதிமுக தொடக்க நாள்: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

SCROLL FOR NEXT