இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன்: 4 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்பு

DIN

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் 104 மணி நேர ( 4 நாள்கள் 8 மணி நேரம்) போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டான்.

சத்தீஸ்கா் மாநிலம் ஜஞ்சீா் சம்பா மாவட்டம் பிரீத் கிராமத்தைச் சோ்ந்த ராகுல் சாஹு என்ற 11 வயது சிறுவன், தனது வீட்டின் பின்புறம் உள்ள 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்தான். கிணற்றில் சுமாா் 60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட அவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், காவல் துறை, மாவட்ட நிா்வாக அதிகாரிகள் என 500-க்கும் மேற்பட்டவா்கள் ஈடுபட்டிருந்தனா். அவனுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் 104 மணி நேர மீட்புப் பணிக்குப் பின்னா், அந்தச் சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டான். அவன் பிலாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது உடல்நிலை சீராக இருப்பதாக பிலாஸ்பூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT