இந்தியா

காஷ்மீர்: இந்த ஆண்டில் இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் இன்று செவ்வாய்கிழமை காலை இரு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இத்துடன் நடப்பாண்டில் காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பண்டிட் சமூகத்தினா், வெளிமாநிலத்திலிருந்து வந்து பணிபுரிவோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

அந்த வகையில் பூஞ்ச், சோபியன் உள்ளிட்ட மாவட்டங்களில் தேடுதல் பணியின் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை 101 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 99-ஆக இருந்த எண்ணிக்கை, இன்று காலை ஸ்ரீநகரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 பேரை சுட்டுக்கொன்றதால் 101 ஆக அதிகரித்துள்ளது.

பலியானவர்களிடமிருந்து அதிகமான ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT