முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு சற்று குறைந்தது: புதிதாக 6,594 பேருக்கு தொற்று

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,594 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:31 AM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,594 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,594 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் 50,548 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 4,035 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 4,26,61,370 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 195.35 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

முழு கட்டுரையைப் படிக்க →