இந்தியா

பினராயிக்கு எதிராக போராட்டம்: மழையிலும் தொடரும் காவலர்களின் தடுப்புப் பணிகள்!

DIN


கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி திருவனந்தபுரத்திலுள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்ட வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க ஆரமித்தது. ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரத்திலுள்ள தலைமை செயலகத்தை பாஜகவினர் பேரணியாக வந்து முற்றுகையிட்டனர்.

தடைகளை மீறி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கலைத்தனர். 

எனினும் பினராயி விஜயன் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என பாஜகவினர் அறிவித்துள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பாஜக மகளிர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைமை செயலகத்தை பாஜகவினர் மேலும் முற்றுகையிட முயற்சித்து வருவதால், மழையிலும் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT