இந்தியா

காஷ்மீரில் தொடரும் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

DIN

காஷ்மீரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின்  குல்கம் மாவட்டத்தில் உள்ள மிஷிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியான பயங்கரவாதியின் அடையாளம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த செவ்வாய்கிழமை முதல் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், புல்வாமா மாவட்டத்திலுள்ள அர்முல்லா கிராமத்தில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 15 கிலோ ஐஈடி வகை வெடிகுண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT