கோப்புப்படம் 
இந்தியா

ம.பி.யில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி, 36 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரி கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர், 36 பேர் காயமடைந்தனர்.  

DIN

மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரி கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர், 36 பேர் காயமடைந்தனர்.  

பியோஹாரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டிகாஹி கிராமத்தில் வெள்ளி இரவு 9.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

திருமண நிகழ்ச்சிக்கு 42 பேரை ஏற்றிச் சென்ற மினி லாரி டிகாஹியின் திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. இவர்கள் தோலாரில் இருந்து டோல் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். 

இந்த விபத்தில் 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 36 பேர் விபத்தில் காயமடைந்தனர். அவர்களின் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்தவர்கள் 40 முதல் 45 வயதுடையவர்கள் ஆவர். 

வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் மணமகன் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் கூறினார். படுகாயமடைந்த 10 பேர் ஷாதோல் மருத்துவக் கல்லூரியிலும், மற்றவர்கள் பியோஹாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

ஓட்டுநர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம்! 2 மாதங்களில் 2வது முறை!

தீராத அனுபவங்கள்... மம்மூட்டி - 54!

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

SCROLL FOR NEXT