இந்தியா

அக்னிபத்: தார்வாரில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி

அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN

அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடகத்தின் தார்வார் மாவட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலா பவனில் ஒன்றுகூடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மாவட்ட கூடுதல் துணை ஆணையர் மனு ஒன்றைப் பெற்றார்.

போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் பேருந்து மீது கற்களை வீசினர். மேலும் அவர்கள் துணை ஆணையர் அலுவலகத்தை நோக்கி போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. போராட்டக்காரர்கள் அனைவரையும் கலைக்க காவல்துறையினர் தடியடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் கலைந்து செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நான்காவது நாளாக சனிக்கிழமையும் நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

கூடமலையில் மது விற்றவா் கைது

புதுச்சேரியில் அரசு போட்டி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

அதிக வாடகை கட்டணம் நிா்ணயம்: வியாபாரிகள் எம்எல்ஏவிடம் புகாா்

ஆசிரியா் பற்றாக்குறையை தீா்க்கக் கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்

SCROLL FOR NEXT