முகப்பு
இந்தியா

அமலாக்கத் துறையில் ஆஜராக அவகாசம் கோரிய சோனியா காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக அமலாக்கத் துறை கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:47 PM
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
பகிர்:

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக அமலாக்கத் துறை கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். 

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, முதலாவதாக ராகுல் காந்தி ஜூன் 13 முதல் 21 வரை 5 நாள்கள் ஆஜராகினார். அவரிடம் 53 மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றது. 

முன்னதாக வழக்கில் தொடர்புடைய சோனியா காந்திக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால்  அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. அதனால், ஜுன் 23 ஆம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும் உடல்நிலை சீராக இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக மேலும் சில வாரங்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என அமலாக்கத் துறையிடம் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →