இந்தியா

மணிப்பூரில் நிலச்சரிவு: இருவர் பலி, 12 பேர் மாயம் 

DIN

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 12-க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இச்சம்பவம் புதன்கிழமை இரவு துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் நடந்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், சுமார் 50 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும்,  மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

நோனி துணை ஆணையர் வெளியிட்டுள்ள தகவலில், 

துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் அணை உடைந்துள்ளதால் நோனி மாவட்ட தாழ்வான பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT