ராகுல் காந்தி 
இந்தியா

‘வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளுங்கள்’: ராகுல் சொல்லும் காரணம் என்ன?

மோடி அரசின் தேர்தல் சலுகைகள் முடிவுக்கு வர உள்ளதால் மக்கள் தங்களது வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி வைத்துக் கொள்ளுமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

DIN

மோடி அரசின் தேர்தல் சலுகைகள் முடிவுக்கு வர உள்ளதால் மக்கள் தங்களது வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி வைத்துக் கொள்ளுமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மணிப்பூரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தன்னுடைய சுட்டுரைப் பதிவில், “மோடி அரசின் தேர்தல் சலுகைகள் முடிவடைய உள்ளதால் மக்கள் தங்களது வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் மட்டும் மத்திய பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை மேற்கொள்வதில்லை என ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. தேர்தலுக்கு பின் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை அமல்படுத்தும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில் ராகுல்காந்தி இத்தகைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT