மேகாலயாவைச் சேர்ந்த 43 மாணவர்களில் 42 பேர் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.
போர் பதற்றம் நிடித்துவரும் உக்ரைனிலிருந்து, பலர் தங்கள் நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
அந்தவகையில் உக்ரைனிலிருந்து 43 மாணவர்களில் 42 பேர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அதே நேரத்தில் ஒருவர் தனது உறவினர்களுடன் அண்டை நாடான போலந்தில் தங்க முடிவு செய்ததாக முதல்வர் கான்ராட் கே சங்மா திங்கள்கிழமை தெரிவித்தார்.
மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடின உழைப்புக்கும், தொடர்ந்து ஆதரவு அளித்ததற்கும் முதல்வர் நன்றி தெரிவித்தார்.