உக்ரைனிலிருந்து இதுவரை 18,000 இந்தியர்கள் மீட்பு
உக்ரைனிலிருந்து இதுவரை சுமாா் 18,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனிலிருந்து இதுவரை சுமாா் 18,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனிலிருந்து கடந்த பிப்.22 முதல் இன்று வரை 18,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் 75 சிறப்பு விமானங்கள் மூலம் 15,521 மாணவர்களும் , 12 ஐஏஎஃப் விமானங்கள் மூலம் 2,467 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதில் ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டிலிருந்து 28 விமானங்கள், ருமேனியா தலைநகா் புகாரெஸ்ட்டிலிருந்து 21 விமானம், அந்நாட்டின் சுச்சைவா நகரிலிருந்து 9 விமானங்கள் , கிவிலிருந்து 1 விமானம், கொய்செ மற்றும் ரெஸோவிலிர்ந்து 16 விமானங்கள் என மொத்தம் 75 சிறப்பு விமானங்களில் இந்தியர்கள் தாயகம் வந்தனர்.