கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி: 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தலாம்
12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு செலுத்த கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு செலுத்த கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கு செலுத்தும் வகையில் அவசரகால பயன்பாட்டிற்காக மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.
படிக்க | உக்ரைனிலிருந்து நேபாளம், பாகிஸ்தானியர்களையும் மீட்கிறது இந்தியா: மத்திய அமைச்சர்
Advertisement
Advertisement
உலக அளவில் நோவாவேக்ஸ் தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவாவேக்ஸ் தடுப்பூசியை முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசியாகப் பயன்படுத்த மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த மத்திய அரசின் மருத்துவ் நிபுணர் குழு கடந்த 7ஆம் தேதி பரிந்துரை செய்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த நோவாவேக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் கோவாவேக்ஸ் தடுப்பூசியை புணேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.