12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு செலுத்த கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கு செலுத்தும் வகையில் அவசரகால பயன்பாட்டிற்காக மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.
உலக அளவில் நோவாவேக்ஸ் தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவாவேக்ஸ் தடுப்பூசியை முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசியாகப் பயன்படுத்த மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த மத்திய அரசின் மருத்துவ் நிபுணர் குழு கடந்த 7ஆம் தேதி பரிந்துரை செய்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த நோவாவேக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் கோவாவேக்ஸ் தடுப்பூசியை புணேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.