பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி?
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆம் ஆத்மி அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆம் ஆத்மி அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்க 59 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், காலை 10 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 70 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
70 இடங்களில் முன்னிலை வகிப்பதன் மூலம், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் அதிரிகத்துள்ளதாகக் கூறப்படுகிறது.