இந்தியா

உத்தரகண்ட் வாக்கு எண்ணிக்கை நிறைவு: 47 இடங்களில் பாஜக வெற்றி

DIN

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்றது. 

பஞ்சாப், கோவா, மணிப்பூரில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் தற்போது, உத்தரகண்டிலும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. 

உத்தரகண்டில் பாஜக 47 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பாஜக மீண்டும் உத்தரகண்டில் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும், சுயேட்சை இரண்டு இடங்களிலும் வென்றுள்ளனர். 

தேர்தல் ஆணைய தரவுகளின்படி உத்தரகண்டில் பாஜக 44.3 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 37.9 சதவிகித வாக்குகளையும், மற்றவை 8.3 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 4.82 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT