விமானத்தில் கத்தி எடுத்துச் செல்ல சீக்கியர்களுக்கு அனுமதி
கிர்பான் எனப்படும் கத்தியை விமானங்களில் எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.
கிர்பான் எனப்படும் கத்தியை விமானங்களில் எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.
இதுகுறித்து மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட செய்தியில்,
உள்நாட்டிற்குள் பயணிக்கும் இந்திய விமானங்களில் மட்டும் சீக்கிய பயணிகள் கர்பானை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. சீக்கியர்கள் எடுத்துச் செல்லும் கிர்பானின் அளவு 22.86 செ.மீ. மற்றும் அதன் கூர்மையான பிளேடின் அளவு 15.24 செ.மீ.க்கு அதிகமாக இருக்கக் கூடாது.
Advertisement
Advertisement
முன்னதாக, சக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான கடத்தலை தடுக்க விமானங்களில் கத்தியை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.