உச்சநீதிமன்றம் 
இந்தியா

தில்லி மாநகராட்சித் தேர்தல் ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

தில்லியில் மாநகராட்சித் தேர்தலை, மத்திய அரசின் தலையீடு இல்லாமல், சுதந்திரமாகவும், நியாயமாகவும், விரைவாகவும் நடத்த

DIN

புதுதில்லி: தில்லியில் மாநகராட்சித் தேர்தலை, மத்திய அரசின் தலையீடு இல்லாமல், சுதந்திரமாகவும், நியாயமாகவும், விரைவாகவும் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி)  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தில்லியில் மூன்றாகப் பிரிக்கப்பட்ட நகராட்சிகளை இணைக்க மத்திய அரசு சட்டம் இயற்ற முயற்சிப்பதாக, தில்லி மாநில தேர்தல் ஆணையம்  தேர்தலை காலவரையின்றி ஒத்திவைத்தது

ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவர்கள் அங்குஷ் நரங் மற்றும் மனோஜ் குமார் தியாகி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், தில்லி மாநகராட்சிகளின் பதவிக்காலம் மே 2022-ல் முடிவதற்குள், மாநிலத் தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் திட்டமிட்ட அட்டவணையின்படி தில்லியில் மாநகராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியது.

தில்லி மாநகராட்சித் தேர்தலுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாகவும், மேலும் அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகளின் மூலம் ஏப்ரல் 2022-ல்  நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் வாகனங்களில் 40% தமிழகத்தில் உற்பத்தி: முதல்வர் ஸ்டாலின்

அதிக வயதானவர்கள் பட்டியலில் இணைந்த ஜப்பானிய பெண்!

தில்லியில் சிபு சோரன் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுக் குழுவை விளாசிய ஊர்வசி!

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

SCROLL FOR NEXT