முகப்பு
உச்சநீதிமன்றம்
இந்தியா

தில்லி மாநகராட்சித் தேர்தல் ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

தில்லியில் மாநகராட்சித் தேர்தலை, மத்திய அரசின் தலையீடு இல்லாமல், சுதந்திரமாகவும், நியாயமாகவும், விரைவாகவும் நடத்த

இந்தியா

தில்லி மாநகராட்சித் தேர்தல் ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

தில்லியில் மாநகராட்சித் தேர்தலை, மத்திய அரசின் தலையீடு இல்லாமல், சுதந்திரமாகவும், நியாயமாகவும், விரைவாகவும் நடத்த

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

புதுதில்லி: தில்லியில் மாநகராட்சித் தேர்தலை, மத்திய அரசின் தலையீடு இல்லாமல், சுதந்திரமாகவும், நியாயமாகவும், விரைவாகவும் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி)  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தில்லியில் மூன்றாகப் பிரிக்கப்பட்ட நகராட்சிகளை இணைக்க மத்திய அரசு சட்டம் இயற்ற முயற்சிப்பதாக, தில்லி மாநில தேர்தல் ஆணையம்  தேர்தலை காலவரையின்றி ஒத்திவைத்தது

ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவர்கள் அங்குஷ் நரங் மற்றும் மனோஜ் குமார் தியாகி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், தில்லி மாநகராட்சிகளின் பதவிக்காலம் மே 2022-ல் முடிவதற்குள், மாநிலத் தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் திட்டமிட்ட அட்டவணையின்படி தில்லியில் மாநகராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியது.

தில்லி மாநகராட்சித் தேர்தலுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாகவும், மேலும் அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகளின் மூலம் ஏப்ரல் 2022-ல்  நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →