இந்தியா

உ.பி: நாளை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்: அனைவரும் தவறாமல் பங்கேற்க உத்தரவு

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25-ஆம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், நாளை திங்கள்கிழமை(மார்ச் 21) லக்னௌவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. 

இதையடுத்து தலைநகா் லக்னௌவில் உள்ள வாஜ்பாய் இகானா விளையாட்டரங்கில், மாா்ச் 25-ஆம் தேதி மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அதில், முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்கவுள்ளாா்.

இந்நிலையில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை திங்கள்கிழமை(மார்ச் 21) காலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், பாஜக சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக யோகி ஆதித்யநாத் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா். மேலிடப் பார்வையாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார். 

இதனைத் தொடர்ந்து அமித் ஷாவும், யோகி ஆதித்யநாத்தும் ஆலோசித்து புதிய அமைச்சரவையில் இடம் பெறுவோரின் பட்டியலை இறுதி செய்வார்கள் என கூறப்படுகிறது. 

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில், பாஜக 255 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் அந்த மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT