இந்தியா

பலாத்காரம், கணவராக இருந்தாலும் பலாத்காரம்தான்: கர்நாடக நீதிமன்றம்

IANS


பெங்களூரு: மனைவியை பலாத்காரம் செய்தது கணவராகவே இருந்தாலும் அதுவும் பலாத்காரம்தான் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

மனைவி அளித்த பலாத்கார புகார் மீது கணவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஆண் என்பவர் ஆண்தான். சட்டம் என்பதும் சட்டம்தான். பலாத்காரம் என்றால் அது பலாத்காரம்தான். ஒரு ஆண் பலாத்காரம் செய்து, அது கணவராக இருந்தாலும், பலாத்காரத்துக்குள்ளான பெண் மனைவியாகவே இருந்தாலும் பலாத்காரம் தான் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி எம். நாகபிரசன்னா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமானது முதல் தன்னை பாலியல் அடிமையாக நடத்துவதாகக் கூறி மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா இந்தத் தீர்ப்பை அளித்து, மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT