திருப்பதி அருகே பாகராப்பேட்டையில் 50 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே பாகராப்பேட்டையில் 50 அடி பள்ளத்தில் நேற்று இரவு தனியார் பேருந்து திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். 45 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் திருமணம் ஒன்றில் பங்கேற்க சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுவதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.