திருப்பதி அருகே பாகராப்பேட்டையில் 50 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே பாகராப்பேட்டையில் 50 அடி பள்ளத்தில் நேற்று இரவு தனியார் பேருந்து திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். 45 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் திருமணம் ஒன்றில் பங்கேற்க சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுவதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.