இந்தியா

எல்லைப் பகுதிகளில் இனி சுற்றுலா செல்லலாம்: சுற்றுலாத் துறை திட்டங்கள்!

நாட்டின் எல்லைப் பகுதிகளையொட்டிய 50 இடங்களில் சாலை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் சுற்றுலாத் துறை கோரிக்கை

DIN

நாட்டின் எல்லைப் பகுதிகளையொட்டிய 50 இடங்களில் சாலை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் சுற்றுலாத் துறை கோரிக்கை வைத்துள்ளது. 

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துபூர்வமாக பதிலளித்தார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது, எல்லைப் பகுதிகள் உட்பட நாட்டில் பல திட்டங்கள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்க சுற்றுலாத் துறை முயற்சித்து வருகிறது.

சுதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டத்தின் கீழ் எல்லைப் பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா கட்டமைப்பை மேம்படுத்த சுற்றுலாத்துறை அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய இடைத்தரகர்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. 

விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் இணைந்து சுற்றுலா வழித்தடங்களை மேம்படுத்த சுற்றுலாத் துறை நிதியுதவி அளிக்கிறது.

எல்லை மாவட்டங்களில் உள்ள சவால்கள், சுற்றுலா மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தடைகள் போன்றவற்றில் உள்ள பிரச்னைகளை மாநில சுற்றுலாத்துறைகளுடன் இணைந்து, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் போக்குகிறது.

தேசிய நீர்வழித்தடங்களில் 9 இடங்களில் படகுத்துறை அமைக்க ரூ.28 கோடி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அடாரி வாகா எல்லைப் பகுதியில் சுற்றுலா தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்க ரூ.13 கோடி வழங்கப்பட்டுள்ளது.

எல்லை பகுதிகளில் சுற்றுலாத்துறை அடையாளம் கண்டுள்ள 50 இடங்களில் சாலை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT